*ஆலயம் சென்று வழிபட்டு திருநீறு முதலிய சாதனங் களை அணிந்து கிரியை வழி நிற்பது புறவழிபாடு.*
ஆனால் ஈசனை அடைய சைவம் கூறும் நான்கு மார்க்கங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவைகள் இறைவனை
அடைவதற்கும், ஆன்மா விடுதலை பெறுவதற்கும் உகந்தது என்கிறது.
இதில் சரியை, கிரியை தொண்டு நெறிகளாகும். இவற்றில் இறைவன் உருவமாய் வழிபடப்படு கிறான் யோகம், ஞானம் இவற்றில் இறைவன் அருவ நிலையில் வைத்து
வழிபடப் பார்க்கிறான்.
இறைவனை ஒளிவடிவில், தனக்குள் காண்பது ஞானம்.
இதைத்தான் சைவஒளி
யான திருநாவுக்கரசர்
"இப்படியன் இந்நிறத்தன்
இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
என்றெழுதிக் காட்டொணாதே" என்றும்
"ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்துளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்" என்றார்.
இதையே சைவ சன்மார்க்க வள்ளலார் "காற்றுருவோ, கடலுருவோ, கனலுருவோ" என்கிறார்.
ஈசன் எல்லாவற்றிலும் உள்ளார்.
புறவழிபாடோ, அகவழி பாடோ, அகப் புற வழிபாடோ இந்த மூன்றிலும் அன்பே ஆதாரமானது.
எனவே எல்லாவல்ல ஈசனை
சிரம் தாழ்த்தி வணங்குங்கள்
கண்களால் காணுங்கள்
செவிகளால் கேளுங்கள்
மூக்கால் முகருங்கள்
வாயால் வாழ்த்துங்கள்
நெஞ்சால் நினையுங்கள்
கையிரண்டைக் கூப்புங்கள்
கால்களால் சிவன் கோபுரத்தை சுற்றுங்கள்
உடலால் உருள்வலம் வாருங்கள் "
எனவே அன்பும் ஈகையும் கொண்டு
ஆதியும் அந்தமு மில்லாத அனைத்துலக முழுமுதற் இறைவனான ஈசனை வணங்கி அவனருளைப் பெறுவோம்.