முன்னரெல்லாம் பாஸ்போர்ட் வாங்க க்யூவில் கால் கடுக்க காத்துகிட்டு இருந்த நிலை இருந்துச்சு.
பாஸ்போர்ட் வழங்கறதுல ஒரு குறிப்பிட்ட பிராசஸ் வரை தனியார் வசம் ஒப்படைச்சதால வேகமா ஒர்க் நடந்து ஆர்டினரி பாஸ்போர்ட் அப்ளை பண்ணாலும் ரிலவன்ட் டாக்குமென்ட்ஸ் சப்மிட் பண்ணிட்டா அது 15 நாட்கள்ல இருந்து 21 நாட்கள்ல கிடைச்சுடுது. அப்ளிகேஷன் ப்ராசஸ் ஆன்லைன்ல வந்துட்டதால இப்போ பாஸ்போர்ட் வாங்கறது ரொம்ப ஈசி.
இதேபோல ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு போன்றவற்றில் ஒரு லெவல் ப்ராசஸ் வரை தனியார் கிட்ட கொடுத்துட்டா வேகமாக பணிகள் நடக்கும். ஆதார்ல ஆன்லைன்ல கரெக்கஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாலும் அதுக்கான ப்ராசஸ் ரொம்ப ஸ்லோவாதான் இருக்கு. ஆதார் சென்டர்களுக்கு போனா அதிகபட்சம் 30 டோக்கன் கொடுத்துட்டு நிறைய பேரை திருப்பி அனுப்பிடறாங்க. ஒரு சின்ன திருத்தம்னா கூட அதுக்கும் டோக்கன் சிஸ்டம் தான்.
சமீபத்தில் தேர்தல் கமிஷன் ஒரு புது ஆப் அறிமுகப்படுத்திச்சு. Voter helpline (National voter's service portal) என்று சொல்லக்கூடிய அந்த அப்ளிகேஷனை வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் டவுன் லோடு செஞ்சுகிட்டா அவங்களே தங்களோட பெயரை இணைச்சுக்கலாம். முகவரி மாற்றிக்கொண்டால் அதற்கான முறையான டாக்குமென்ட் அப்லோடு செஞ்சு திருத்தம் செஞ்சுக்கலாம்னு ஊடகங்கள் வாயிலாக அறிவிச்சு இருந்தாங்க. உங்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு 15 நாட்களுக்குள் எல்லா ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு மாற்றங்களை வாக்காளர் அட்டையில் சரி செய்து நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு விவரமும் வந்து சேர்ந்துடும்னு தேர்தல் கமிஷன் ஆணையர் விவரமா சொன்னாரு.
ஃபார்ம் 8 ல் ஒரு கரக்ஷன் பண்ணவேண்டியிருந்துச்சு. இவங்க அப்பப்போ போடற முகாமுக்கு( முகாம்ல ஒரு முறை கொடுத்த அப்ளிகேஷனே கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கு) போற வேலை மிச்சமாச்சுன்னு அந்த அப்ளிகேஷன் டவுன்லோடு செஞ்சு ப்ராப்பரா அவங்க கேட்ட டாக்குமென்ட் அப்லோடு பண்ணியிருந்தேன். முதல்ல என் மொபைலுக்கு வந்த ஒரு மெசேஜ்ல உங்க விண்ணப்பம் ஏற்கப்பட்டதுன்னு அக்நாலட்ஜ் பண்ணி ப்யூச்சர் கரஸ்பான்டன்ஸ்க்கு ஒரு ரெஃபரன்ஸ் நெம்பரும் கொடுத்தாங்க. பரவாயில்லையே தேர்தல் கமிஷன் ரொம்ப சுறுசுறுப்பா இயங்குது னு சந்தோஷமா இருந்துச்சு. இரண்டு நாள் கழிச்சு உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதுன்னு ஒரு மெசேஜ்.
தேர்தல் கமிஷன் சொன்னதுபோல இந்த அப்ளிகேஷன்ல விவரங்களை சொல்லி addition/correction/ deletion பண்றது எல்லாருக்கும் ஈசியாப்போச்சுன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். இன்னையோட 32 நாள் ஆச்சு. ஒரு இன்ஃபார் மேஷனும் இல்லே. Track application status ல போய்ப்பார்த்தா under process ல யே இருக்கு.
அரசாங்கத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் சிறப்பான அறிக்கைகளை மக்கள் பயன்படுகின்ற வகையில் ஊடகங்கள்ல மக்களுக்கு விடறாங்க. ஆனால் அவங்களுக்கு கீழே பணிபுரிய ஆட்கள் அவங்களோட பணியினை சரிவர செய்யறது இல்லே. இதே ஒரு தனியார் நிறுவனமாக இருந்தா இந்த ப்ராசஸ் எல்லாம் வேகமாக நடந்து முடிஞ்சு வாக்காளர் அடையாள அட்டையில் அப்டேட் ஆகி இருக்கும். இதை எல்லாம் பாக்கறப்போ அரசு சார்ந்த துறை ஊழியர்கள் என்றாலே பணியில் மந்தம்னுதான் நினைக்கவேண்டியிருக்கு. எத்தனை பேர் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிப்படி வேலையை ஒழுங்க செய்யறாங்கன்னு கேட்டா ஒரு 20 சதவீதமாச்சும் தேறுவாங்களாங்கிறது கூட சந்தேகம் தான். காலையில் மிகச்சரியான நேரத்துக்கு நான் அலுவலகம் போய்ட்டு எனக்கு கொடுக்கப்பட்ட பணியினை சரிவரச் செய்யறேன்னு மார்தட்டிக்கறவங்களை பாக்கறதே ரொம்ப கஷ்டம்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான அடையாள அட்டைகளின் ப்ராசஸ் எல்லாத்தையும் தனியார் வசம் கொடுத்துட்டு தேவையற்ற அரசு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிடறது நல்லது. இல்லேன்னா அரசு அலுவலங்களில் நடைபெறும் அலைக்கழிப்பு என்பது எல்லாவற்றிலும் தொடரத்தான் செய்யும்.